நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அதன் படி தேசிய கொடியை ஆலயத்தை சுற்றிலும் ஊர்வலமாக எடுத்து வந்து பின்னர் மாலை அணிவிக்கப்பட்ட கம்பத்தில் கட்டினர்.
இந்தக் கம்பத்தை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர உச்சிக்கு எடுத்து சென்று நட்டனர். 140 அடி உயரத்தில் பறந்த இந்த தேசிய கொடிக்கு பலரும் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர தின விழாவை ஒட்டி நெல்லையப்பர் கோயில் முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடிக்கு கோயில் யானை காந்திமதி மரியாதை செலுத்தியது. பக்தர்களின் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க தேசியக்கொடி ஏற்றப்பட்ட போது அனைத்து தரப்பினரும் மரியாதை செலுத்தினர்.
அப்போது கோயில் யானை காந்திமதி தேசியக்கொடிக்கு துதிக்கையை உயர்த்தி வணக்கம் செலுத்தியது காண்போரை கவரும் விதமாக அமைந்த்து.