மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முக்கிய தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி தனது 93-வது வயதில் காலமானார். மூன்று முறை பிரதமர் பதவியை அலங்கரிந்த அவருக்கு கடந்த 2014ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி கெரவிக்கப்பட்டது. இந்நிலையில் வாஜ்பாயின் நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, . தமகா தலைவர் ஜிகே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி .சண்முகம் உள்ளிட்ட தலைவர்களும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.