நாசா கண்டுபிடிப்பு! : செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல்?
Mar 15, 2026, 03:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாசா கண்டுபிடிப்பு! : செவ்வாய் கிரகத்தில் பெருங்கடல்?

Murugesan M by Murugesan M
Aug 18, 2024, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அறிவியல் ஆராய்ச்சியின் முக்கிய திருப்பமாக செவ்வாய் கிரகத்தில் நிலத்தடியில் மறைந்திருக்கும் மகாசமுத்திரத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலத்தடி நீர்த்தேக்கம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு முழுவதையும் தண்ணீரால் மூடுவதற்கு போதுமானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த தண்ணீரை பயன்படுத்துவது சாத்தியமா ? இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ உதவுமா? இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மூன்று பில்லியன் ஆண்டுகளாக தான் செவ்வாய் கிரகம் பாலைவனமாக இருக்கிறது. அதற்கு முந்தைய காலங்களில், அங்கே தண்ணீர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் நீண்ட காலமாகவே விஞ்ஞானிகளுக்கு இருந்து வந்தது. கூடவே செவ்வாய் கிரகத்தில் இருந்த தண்ணீர் எல்லாம் என்ன ஆனது? வற்றி விட்டதா ? என்ற கேள்விகளும் விஞ்ஞானிகளுக்கு எழுந்தது.

இதன் விளைவாக, செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா ? என்ற ஆய்வுகள் தொடங்கப் பட்டன. செவ்வாய் கிரகத்தின் நீர் சுழற்சியைப் புரிந்துகொள்வது என்பது காலநிலை, மேற்பரப்பு மற்றும் உட்புறத்தின் பரிணாமத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் விண்வெளி ரோபோடிக் எக்ஸ்ப்ளோரர், (InSight Lander ) இன்சைட் லேண்டர், 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தைத் தொட்டது.

செவ்வாய் கிரகத்தின் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்த இந்த ரோவர் 1,300 க்கும் மேற்பட்ட செவ்வாய் கிரக நிலப் பரப்பின் படிமங்களை ஆய்வு செய்தது தரவைப் படித்தது.

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள Elysium Planitia என்னும் சமவெளியில் இருந்து செவ்வாய் கிரகத்தின் தரவுகள் சேகரிக்கப் பட்டது.

நாசா விஞ்ஞானிகள் குழு இந்தத் தரவுகளைக் கணினி மாதிரிகளுடன் இணைத்து, ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே, 2015 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் திரவ உப்புநீரைக் கண்டறிந்தாலும், நாசாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு மிக முக்கியமான கண்டுபிடிப்பாகும்.

ஏனெனில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த தண்ணீர் செவ்வாய் கிரகத்தின் நடுப்பகுதியில் ஏழு மைல்கள் முதல் 12 மைல்கள் வரை நிலத்தடியின் கீழ் இருக்கும் என நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு, சீனாவின் மார்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் மிகவும் பரவலாக இருக்கலாம் என்று கண்டறிந்தது குறிப்பிடத் தக்கது.

ஆராய்ச்சி தேசிய அறிவியல் அகாடமியின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்டுள்ள இந்த ஆராய்ச்சி முடிவுகள், செவ்வாய் கிரகத்தில் உறைந்த நீருடன் கூடுதலாக திரவ நீர் உள்ளது என்பதற்கு சிறந்த சான்றாக அமைத்திருக்கிறது.

இதற்கிடையே ,பூமியில் கூட, அரை மைல் ஆழத்துக்கு தோண்டுவது கஷ்டமான வேலையாக இருக்கும் போது செவ்வாய் கிரகத்தில் நிலத்தைத் தோண்டுவது மிகவும் கஷ்டம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Tags: NASA discovery! : Ocean on Mars?
ShareTweetSendShare
Previous Post

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!

Next Post

அதிகரிக்கும் மவுசு! : விரைவில் வருகிறது BSNL 5ஜி சேவை!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies