தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கோயில் ஊழியரை அரிவாளால் வெட்டிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயிலில் சண்முகம் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.