நிலவுக்கு தொடர்ச்சியாக விண்கலம் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரயான்-3 திட்டம் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக சந்திரயான்-4, 5 ஆகிய திட்டங்களுக்கான வடிவமைப்பு முடிவடைந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கூறிய அவர், தொடர்ச்சியாக நிலவுக்கு விண்கலங்கள் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.