கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக அவர் பயிற்சி பெற்றுவந்த மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் 5-ஆவது நாளாக சிபிஐ விசாரணை நடத்தியது.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவியை சந்தீப் கோஷ் ராஜினாமா செய்தார்.
இருப்பினும், அடுத்த சில மணிநேரத்தில் அவரை மற்றொரு மருத்துவக் கல்லூரி முதல்வராக மேற்கு வங்க அரசு நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று நான்காவது நாளாக சுமார் 13 மணிநேரம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவர் 5-ஆவது நாளாக இன்றும் விசாரணைக்காக கொல்கத்தா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.