கேரள மாநிலம் பாலக்காட்டில் வரும் 31 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் இந்தக் கூட்டம் கடந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது.
நிகழாண்டில் பாலக்காட்டில் வரும் 31 முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தத்தத்ரேயா ஹோசபலே ஆகியோரது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத், ஏபிவிபி, பாஜக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள், சமூக மாற்றுத்துக்கான பல்வேறு பரிமாணங்கள் மீதான திட்டமிடல் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.