கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஏபிவிபி தொண்டர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
பெண் மருத்துவர் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஏபிவிபி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.