5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கில், சிங்கமுத்து பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை சிங்கமுத்து தமக்கு வாங்கி கொடுத்ததாகவும், இதுதொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் நடிகர் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியதாகவும், ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் நடிகர் வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.