இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும் : ஜக்தீப் தன்கர்
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும் : ஜக்தீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Aug 21, 2024, 04:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் வளர்ச்சி உலகில் நிலைத்தன்மை, அமைதியை அதிகரிக்கும்: குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத்தலைவர்  ஜக்தீப் தன்கர், உலகளாவிய தென் பகுதியின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் உள்ளடக்கிய, அணுகுமுறையை முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இந்தியாவின் உதயம், துடிப்பான ஜனநாயகம், மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் இடம், உலகளாவிய ஸ்திரத்தன்மை மற்றும் அமைதிக்கு முன்னறிவிப்பு” என்று அவர் கூறினார்.

“ஒரே எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற 19-வது இந்திய தொழில் கூட்டமைப்பு இந்தியா-ஆப்பிரிக்கா வர்த்தக மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், அனைவரின் நல்வாழ்வுக்கும் பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“ஒரே எதிர்காலத்தை உருவாக்குவது மனிதகுலத்தின் நிலைத்தன்மைக்கு மிகச்சிறந்ததாகும். மேலும் இந்த சவாலை இனியும் தாமதப்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சவாலை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளும் கூட்டாக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய உறவுகள் குறித்து கவனத்தை ஈர்த்த தன்கர், “பகிரப்பட்ட வரலாறுகள், பொதுவான போராட்டங்கள்  மற்றும் முற்போக்கான எதிர்காலத்திற்கான பரஸ்பர அபிலாஷைகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது” என்று ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

சிறுத்தைகளை வழங்கியதன் மூலம் நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தை மீண்டும் உருவாக்க உதவியதற்காக ஆப்பிரிக்காவுக்கு இந்தியாவின் நன்றியைத் தெரிவித்த குடியரசு துணைத்தலைவர்,

“இந்த வளர்ச்சி தேசத்தை உற்சாகப்படுத்தியதுடன், இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான இணைப்பைக் கொண்டு வந்தது” என்று குறிப்பிட்டார். சர்வதேச பெரிய பூனை கூட்டணியில் சேருமாறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

சிஐஐ தலைவரும், ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான திரு. சஞ்சீவ் பூரி, சிஐஐ ஆப்பிரிக்கா கமிட்டியின் தலைவரும், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவருமான திரு நோயல் டாடா, சிஐஐ தலைமை இயக்குநர் திரு. சந்திரஜித் பானர்ஜி மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags: India's growth will increase stabilityprogress of the Global SouthIndia-Africa Trade ConferenceVice President Jagdeep Dhankar
ShareTweetSendShare
Previous Post

தொடர் போராட்டத்தில் மருத்துவர்கள் : பணிக்கு திரும்புமாறு எய்ம்ஸ் இயக்குநர் அறிவுறுத்தல்!

Next Post

சிறையில் இருந்தவாறு வெற்றி பெற்ற பாரமுல்லா தொகுதி எம்பி ரஷீத் ஜாமீன் கோரி மனு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies