வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் உள்ள வசதிகள் என்ன?
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் உள்ள வசதிகள் என்ன?

Murugesan M by Murugesan M
Aug 29, 2024, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஐரோப்பாவில் உள்ள நைட்ஜெட் ஸ்லீப்பர் ரயில்களைப் போல வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. அது குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய இரயில்வே தன்னை நவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. சுகமான மற்றும் வேகமான பயண அனுபவத்தை மக்களுக்கு வழங்க தொடர் முயற்சிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இரயில் பயணிகளுக்கு இந்திய அரசு கொடுத்த அற்புதமான பரிசு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றால் மிகையில்லை.

நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்ட அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரபலமடைந்து வருகிறது.  அடுத்த கட்டமாக, வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தொடங்கி விடும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அதற்கான முன்னேற்பாடுகளைக் கிட்டத்தட்ட ஏற்பாடுகளை முழுமையாக முடிந்து விட்டதாகவும் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் வரும் செப்டம்பர் 20ம் தேதி பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து சேரும் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில், இறுதி சோதனை  20 நாட்களில் முடிவடைந்த பிறகு, லக்னோவில் உள்ள இந்தியன் இரயில்வே வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பின் (RDSO) மேற்பார்வையில், அலைவு சோதனைகள் உட்பட முக்கிய சோதனைகள் நடத்தப்படும் என்றும், அதன் பிறகு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த ஆண்டு இறுதிக்குள் வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயில் அர்ப்பணிக்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய இந்த ஸ்லீப்பர் ரயிலில்  823 பெர்த்கள் உள்ளன. இவற்றில், 3rd ஏசியில் 611இருக்கைகள் கொண்ட 11 பெட்டிகளும், 2nd ஏசியில் 188 இருக்கைகள் கொண்ட 4 பெட்டிகளும் மற்றும் 1st ஏசியில் 24 இருக்கைகள் கொண்ட ஒரு பெட்டியும் உள்ளன.

நேர்த்தியான வெளிப்புறத்தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில், பயணிகளின் வசதிக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளன.

USB சார்ஜிங் வசதி கொண்ட படிப்பதற்கான விளக்குகள், மொபைல் சார்ஜிங் வசதிகள் , சிற்றுண்டி மேசை போன்ற நவீன வசதிகளுடன் உள்ள இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் இரயிலில் ,விபத்து தடுப்பு கவச அமைப்பும் பொருத்தப் பட்டுள்ளது.

பெர்த்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கூடுதல் குஷன் மற்றும் மேல் மற்றும் நடுத்தர பெர்த்களுக்கு எளிதாக ஏறி இறங்கும் வகையில் நவீன ஏணி ஆகியவை பயணிகளின் விருப்பம் அறிந்து உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் பொதுவான பகுதிகளில் சென்சார் அடிப்படையிலான விளக்குகளும் அமைக்கப் பட்டுள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு பெர்த்கள் மற்றும் தானியங்கி வெளிப்புறக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாமல், விமானத்தில் இருப்பதைப் போல பயோ கழிப்பறைகள் மற்றும் வெந்நீர் ஷவர் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தனை நவீன வசதிகளுடன் கூடிய இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், ரயில் பயணிகளுக்கு உயர்தர பயண அனுபவத்தை வழங்கும் என்று ரயில்வே உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: indian railwaysIndia's first Vande Bharat sleeper trainVande Bharat sleeper trainChennai Bangalore
ShareTweetSendShare
Previous Post

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட தேவையில்லை – மெட்ரோ ரயில் திட்ட தந்தை ஸ்ரீதரன்

Next Post

வில்லியனூர் காவல் நிலையத்தில் புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநர் ஆய்வு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies