சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரூ இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வரும் 31ஆம் தேதி காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்தியாவில் தற்போதைய நிலையில் 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை-பெங்களூர், சென்னை-கோவை, கோவை-பெங்களூர் மற்றும் சென்னை-திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.