தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க ஹெச். ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்புக்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்றுள்ளார். மூன்று மாதம் கழித்து நவம்பர் இறுதியில் வர் சென்னை திரும்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதுவரை கட்சியின் செயல்பாடுகளைக் கவனிக்க பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒருங்கிணைப்பாளராக ஹெச். ராஜா செயல்படுவார் என பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், ராம சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா , பாஜக தலைமை எதிர்பார்க்கும் வகையில் ஒருங்கிணைப்பு குழு செயல்படும் என தெரிவித்தார்.