பாலியல் குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாக பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
கேரள திரையுலகில் பெண் கலைஞர்களுக்கு நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகள் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் பல முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் புகார்கள், அதில் கூறப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தம் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்முறையாக நடிகர் ஜெயசூர்யார்மறுப்பு தெரிவித்துள்ளார் .
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தம் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த பிறந்த நாளை வேதனையான பிறந்த நாளாக மாற்றியவர்களுக்கு மிக்க நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.