125 இந்திய மொழிகளில் AI தொழில்நுட்பம் - Google DeepMind முயற்சி!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

125 இந்திய மொழிகளில் AI தொழில்நுட்பம் – Google DeepMind முயற்சி!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 04:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூகுள் டீப் மைண்டின் இந்திய பிரிவு, 125 வெவ்வேறு இந்திய மொழிகளின் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொண்டு செயல்படக்கூடிய AI தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2010 ஆம் ஆண்டு Google DeepMind, என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்தை கூகுள் உருவாக்கியது. முதலில் AlphaGo, Go விளையாட்டுத் துறையில் AI யை கூகுள் வெற்றிகரமாக பயன்படுத்தி பிரபலமானது.

தொடர்ந்து பல்வேறு மொழிகளைப் புரிந்து கொள்ளும் AI தொழில்நுட்பத்தில் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் ,இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ARTPARK என்ற செயற்கை நுண்ணறிவு & ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றுடன் இணைந்து Google DeepMind புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 773 மாவட்டங்களிலிருந்து 1, 54,000 மணிநேர பேச்சுத் தரவுகளைச் சேகரித்து படியெடுக்கும் இலக்குடன் வாணி திட்டம் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப் பட்டது.

125 இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் பிரதிபலிக்கும் AI மாதிரியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியா அதிகாரப்பூர்வமாக 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது. என்றாலும் இந்தியாவில் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத பல மொழிகளைப் பேசி வருகிறார்கள். இவற்றில் 60 மொழிகள் சுமார் 100 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களால் பேசப்படுகின்றன.

இந்தியாவில் பேசும் மொழிகளில் பல, அதிகமாக அறியப்படாதவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் பேசும் இந்தி, இணைய உள்ளடக்கத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் பேசும் 125 மொழிகளில் 73 மொழிகளில் எந்தவொரு டிஜிட்டல் தரவும் இல்லை என்று கூறும் கூகுள் டீப் மைண்டின் இயக்குனர் மணீஷ் குப்தா, போதிய மொழித் தரவு இல்லாத மொழிகளின் பேச்சுத் தரவுகளை நாடு முழுவதிலும் இருந்து சேகரிப்பதே வாணி திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், முதல் கட்டமாக, 80 மாவட்டங்களில் 80,000 பேரிடம் இருந்து 58 மொழிகளில் 14,000 மணிநேர பேச்சு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாணி திட்டம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 160 மாவட்டங்களில் இந்த பேச்சுத் தரவைச் சேகரிப்பை விரிவுபடுத்தி வருகிறது .

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை உண்மையாகவே பிரதிபலிக்கும் AI-யை உருவாக்க இந்த மிகப்பெரிய தரவு சேகரிப்பு முயற்சி முக்கியமானது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களால் பேசப்படும் ஒவ்வொரு மொழியும், டிஜிட்டல் யுகத்தில் அதற்கென ஒரு இடத்தை வாணி திட்டம் உறுதி செய்கிறது. மேலும், இந்த திட்டத்தால், நாட்டின் வளமான மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Tags: Google DeepMindAI technologiesVani project
ShareTweetSendShare
Previous Post

மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலை நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்!

Next Post

எந்த துறையிலும் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லமுடியும் – கிரிக்கெட் வீரர் நடராஜன்

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies