125 இந்திய மொழிகளில் AI தொழில்நுட்பம் - Google DeepMind முயற்சி!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

125 இந்திய மொழிகளில் AI தொழில்நுட்பம் – Google DeepMind முயற்சி!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 04:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூகுள் டீப் மைண்டின் இந்திய பிரிவு, 125 வெவ்வேறு இந்திய மொழிகளின் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொண்டு செயல்படக்கூடிய AI தொழில்நுட்பங்களை மேம்படுத்தி வருகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

2010 ஆம் ஆண்டு Google DeepMind, என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனத்தை கூகுள் உருவாக்கியது. முதலில் AlphaGo, Go விளையாட்டுத் துறையில் AI யை கூகுள் வெற்றிகரமாக பயன்படுத்தி பிரபலமானது.

தொடர்ந்து பல்வேறு மொழிகளைப் புரிந்து கொள்ளும் AI தொழில்நுட்பத்தில் கூகுள் கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் ,இந்திய அறிவியல் நிறுவனம் மற்றும் ARTPARK என்ற செயற்கை நுண்ணறிவு & ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப பூங்கா ஆகியவற்றுடன் இணைந்து Google DeepMind புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 773 மாவட்டங்களிலிருந்து 1, 54,000 மணிநேர பேச்சுத் தரவுகளைச் சேகரித்து படியெடுக்கும் இலக்குடன் வாணி திட்டம் 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப் பட்டது.

125 இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகளைப் புரிந்துகொள்ளும் மற்றும் பிரதிபலிக்கும் AI மாதிரியை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியா அதிகாரப்பூர்வமாக 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது. என்றாலும் இந்தியாவில் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத பல மொழிகளைப் பேசி வருகிறார்கள். இவற்றில் 60 மொழிகள் சுமார் 100 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களால் பேசப்படுகின்றன.

இந்தியாவில் பேசும் மொழிகளில் பல, அதிகமாக அறியப்படாதவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் பேசும் இந்தி, இணைய உள்ளடக்கத்தில் 0.1 சதவிகிதம் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் பேசும் 125 மொழிகளில் 73 மொழிகளில் எந்தவொரு டிஜிட்டல் தரவும் இல்லை என்று கூறும் கூகுள் டீப் மைண்டின் இயக்குனர் மணீஷ் குப்தா, போதிய மொழித் தரவு இல்லாத மொழிகளின் பேச்சுத் தரவுகளை நாடு முழுவதிலும் இருந்து சேகரிப்பதே வாணி திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம், முதல் கட்டமாக, 80 மாவட்டங்களில் 80,000 பேரிடம் இருந்து 58 மொழிகளில் 14,000 மணிநேர பேச்சு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் வாணி திட்டம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 160 மாவட்டங்களில் இந்த பேச்சுத் தரவைச் சேகரிப்பை விரிவுபடுத்தி வருகிறது .

இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை உண்மையாகவே பிரதிபலிக்கும் AI-யை உருவாக்க இந்த மிகப்பெரிய தரவு சேகரிப்பு முயற்சி முக்கியமானது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்திய மக்களால் பேசப்படும் ஒவ்வொரு மொழியும், டிஜிட்டல் யுகத்தில் அதற்கென ஒரு இடத்தை வாணி திட்டம் உறுதி செய்கிறது. மேலும், இந்த திட்டத்தால், நாட்டின் வளமான மொழியியல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

Tags: Google DeepMindAI technologiesVani project
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முதலை நடமாட்டம் : பொதுமக்கள் அச்சம்!

Next Post

எந்த துறையிலும் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லமுடியும் – கிரிக்கெட் வீரர் நடராஜன்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies