ஆவணி அமாவாசையை ஒட்டி உத்தரகாண்ட் கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
ஒவ்வொரு மாதம் வரும் அமாவாசை திதி, வெவ்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு சில மாதங்களில் வரும் அமாவாசை, தனிச்சிறப்பு வாய்ந்தது.
ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சூரியனுடன் சந்திரன் இணையும் நாள் தான் ஆவணி அமாவாசை. 2024 ஆவணி மாதம் இன்று வரும் சோமாவதி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த நாளை ஆவணி அமாவாசை என்று பொதுவாக தமிழ் மாத அடிப்படையில் அழைக்கப்படுகிறது
இந்நிலையில், ஆவணி அமாவாசையை முன்னிட்டு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாட்டில் ஈடுபட்டனர்.