நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே எதிர்வீட்டு பெண்ணால் படுகொலை செய்யப்பட்ட 3 வயது சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆத்துக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் – ரம்யா தம்பதியின் இரண்டாவது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அவரது வீட்டிற்கு அருகே இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறப்படும் பெண்ணால் கொடூரமாக கொலை செய்யபட்டார்.
இது தொடர்பாக அந்த பெண்ணை கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று இரவு உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. பின்னர் சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.