மகளின் பாலியல் கொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களை தெரிவிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பெண் மருத்துவரின் கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தை முடக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது மகள் படுகொலை வழக்கில் முதலமைச்சர் மம்தா பொய்யான தகவல்களை கூறி வருவதாக சாடினார். மகளின் மறைவுக்கு பணம் தருவதாக முதலமைச்சர் மம்தா கூறினார் என்றும், தனது மகளுக்கு நியாயம் கிடைத்தவுடன் தங்களை சந்தித்து பணத்தை பெற்று கொள்வதாக முதலமைச்சரிடம் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு குடும்ப உறுப்பினர்கள் போல மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ள அவர், நீதி கிடைக்கும் வரை சாலையிலேயே இருப்போம் என அவர் குறிப்பிட்டார்.