மத்திய நிதியமைச்சருடன் உணவக உரியமையாளர் பேசிய வீடியோ வெளியான விவகாரத்தில் முடித்து வைக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், மத்திய நிதி அமைச்சர் மற்றும் உணவக உரிமையாளர் இடையே தனிப்பட்ட உரையாடல் தொடர்பான வீடியோவை நிர்வாகிகள் பகிர்ந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருகிறேன்.
அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளரான சீனிவாசன் அவர்களுடன் பேசினேன்.
அன்னபூர்ணா சீனிவாசன் அண்ணா தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார், மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்த விவகாரத்தை முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.