அன்னபூர்ணா உரிமையாளர் விரும்பியே மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார் - ஹெச். ராஜா
Jan 14, 2026, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அன்னபூர்ணா உரிமையாளர் விரும்பியே மத்திய நிதி அமைச்சரிடம் மன்னிப்பு கோரினார் – ஹெச். ராஜா

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 11:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அன்னபூர்ணா விவகாரத்தில் உணவக உரிமையாளர் விரும்பியே தான் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரினார் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் மையக் குழுவின் கூட்டம்  திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் குறித்து ஆலோசனை  நடைபெற்றது.

பின்னர் ஹெ.ராஜா  செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது :

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை பணிகளை துரிதப்படுத்துவதற்கான அடையாளமாக மத்திய மைச்சர் நிதின் கட்கரி வருகை தந்து அந்த பணிகளை ஆய்வு செய்தார்.

தமிழக அரசு தாமதமில்லாமல் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தால் நெடுஞ்சாலை பணிகள் துரிதமாக நடைபெறும். மத்திய மாநில அரசு இணைந்து செயல்பட்டால் தான் எந்த திட்டங்களாக இருந்தாலும் விரைந்து செயல்படுத்த முடியும்.

மத்திய அரசு வழங்கும் நிதியை செயல்படுத்தும் இடத்தில் மாநில அரசு தான் உள்ளது. மத்திய அரசின் விஷ்வகர்மா நிதி உதவி திட்டத்தை இதுவரை மாநில அரசு வெளியிடவில்லை. வரும் 17 ஆம் தேதி விஷ்வர்மா தினம். அந்த தினத்திற்குள் மாநில அரசு அரசிதழில் வெளியிட்டால் தொழில் செய்யும் அமைப்பான விஷ்வகர்மாவை சேர்ந்தவர்களுக்கு பயனாக இருக்கும்.

36 விதமான வரிகளை ஒன்றுபடுத்தி சரக்கு மற்றும் சேவை வரியாக மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. புதிதாக எந்த வரியும் விதிக்கப்படவில்லை. வெண்ணைக்கு வரி ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே இருந்தது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் சில கோரிக்கைகள் இருக்கலாம். அந்த கோரிக்கைகளை பரிசீலினை செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.

கோவை அன்னபூர்ணா உணவக அதிபர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் அந்த உணவக அதிபரே நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்க விரும்பியதால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவரே விரும்பி தான் மன்னிப்பு கேட்டார். அவர் மன்னிப்பு கேட்டது தொடர்பாக பாஜகவிற்கும் நிர்மலா சீதாராமன் தரப்பிற்கும் எந்த பங்கும் இல்லை.

இந்தியாவிற்கு விரோதமாக வெளிநாட்டில் பேசிய ராகுல் காந்தி “ஆண்டி இந்தியன்”. அவர் அமெரிக்கா சென்று இந்தியாவிற்கு எதிரான நபர்களுடன் கலந்துரையாடினார்.
அப்படிப்பட்ட ராகுல் காந்தி குறித்து நாம் பேச வேண்டாம் என ஹெச்.ராஜா தெரிவித்தார்.

Tags: h rajafinance minister nirmala seetharamanannpooran hotel owener
ShareTweetSendShare
Previous Post

பணத்திற்காக பச்சிளம் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் – தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – பாதுகாப்பு படையினர் இருவர் வீரமரணம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies