உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு காரணமாக ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள தமிழர்களில் ஒருவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் சொந்த ஊர் திரும்புவதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தெரிவித்தார்.