அந்தமானில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள் - போர்ட் பிளேர் பெயர் மாற்றம் ஏன்? சிறப்பு கட்டுரை!
Jul 26, 2025, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அந்தமானில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள் – போர்ட் பிளேர் பெயர் மாற்றம் ஏன்? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காலனித்துவ அடிமை சின்னங்களில் இருந்து தேசத்தை விடுவிக்கும் நடவடிக்கையாக, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் இனி ஸ்ரீவிஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் காலனித்துவ விரிவாக்கத்தில் அந்தமான் தலைநகருக்கு போர்ட் பிளேர் என்ற பெயர் எப்படி வந்தது என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கண்கவரும் இயற்கை அழகு கொஞ்சும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், உலகின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், புவியியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பின் கிழக்கில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவில், மியான்மரில் இருந்து இந்தோனேஷியா வரை நீண்டுகொண்டிருக்கும் மலைத்தொடர்களுடன் இத்தீவுகள் அமைந்திருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான இங்கு மொத்தமாக 836 தீவுகள் இருந்தாலும்,
சுமார் 37 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். 22 சிறிய நிக்கோபார் தீவுகளில் 10 தீவுகளில் மட்டும் மக்கள் வசிக்கின்றனர்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேர், பிரிட்டிஷ் காலனித்துவ விரிவாக்க முயற்சிகளுக்குப் பங்காற்றினார்.

குறிப்பாக, அந்தமான் தீவுகளை ஆய்வு செய்த பிளேர், அந்த தீவுகளைப் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மையமாக மாற்றலாம் என்று பரிந்துரை செய்திருந்தார். அதுவே, அடுத்தடுத்த காலனித்துவ வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைந்திருந்தது.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ராணுவ, நிர்வாக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான துறைமுகம் அமைத்து, ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தனர்.

இந்திய விடுதலை போராட்ட வீரர்களை அடைத்து வைக்க தனியாக செல்லுலார் சிறையும் இந்த தீவில் அமைக்கபட்டது.

பிளேர் முதன் முதலில் வந்திறங்கிய மீனவக் குக்கிராமத்தை, அந்தமானின் தலைநகராக மாற்றிய ஆங்கிலேயர்கள், அவரது நினைவாக , போர்ட் பிளேர் என்று பெயரிட்டார்கள்.

விடுலைக்குப் பின் இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இருப்பதால், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகின்றன.

நாட்டின் மீதுள்ள காலனித்துவ அடிமை சின்னங்களை மாற்ற வேண்டும் என்ற இந்திய பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் இருந்து, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின்(Port Blair) பெயர் ஶ்ரீ விஜய புரம்(Sri Vijaya Puram) என மாற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், சுதந்திரப் போராட்டம் மற்றும் வரலாற்றில் இணையில்லாத இடத்தை பெற்றுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக செயல்பட்டதாகவும்,இப்போதும் இந்த தீவுப் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியத் தளமாக விளங்குவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

இத்தீவு தான், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ணக் கொடியை முதன்முதலில் வெளிப்படுத்திய இடமாகவும், வீரசாவர்க்கர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடிய செல்லுலார் சிறையுமாகும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ விஜயபுரம் என்ற பெயர், இந்தியா சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும், அதில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கடற்படை அதிகாரியின் நினைவாக ஒரு மீனவக் கிராமத்திற்கு போர்ட் பிளேயர் என்று பெயர் சூட்டப்பட்டது என்பது வரலாறு.

ஆனால் ஸ்ரீ விஜய புரம் என்று பெயர் மாற்றம் செய்திருப்பது, புதிய சுதந்திர இந்தியாவை உருவாக்குவதில் நகரத்தின் பங்களிப்புக்கு ஏற்ற பொருத்தமான மரியாதையாகும்.

Tags: Port Blaircapital of Andaman and Nicobar Islandssymbols of colonial slaverySrivijayapuram
ShareTweetSendShare
Previous Post

கர்நாடக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு – சித்தராமையாவை நோக்கி விரைந்த இளைஞர் !

Next Post

குஜராத்தில் ரூ. 8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies