மழை வேண்டுமா? வேண்டாமா? : வருகிறது புதிய தொழில்நுட்பம் அசத்தப்போகும் இந்தியா!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை வேண்டுமா? வேண்டாமா? : வருகிறது புதிய தொழில்நுட்பம் அசத்தப்போகும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 18, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் பெருமழையைத் தடுக்கவும் அல்லது வறட்சியான இடங்களில் மழையை ஏற்படுத்தவும் கூடிய புதிய தொழில்நுட்பம், இன்னும் 5 ஆண்டுகளில், மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு ஆராய்ச்சித் திறனை மேம்படுத்தும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்துக்கு இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

“மௌசம்” என்ற சொல்லுக்கு “வானிலை” அல்லது “பருவம்” என்று பொருள். மேலும், அரபுச் சொல்லான மவ்சிம், படகுகள் பாதுகாப்பாகப் பயணிக்கும் பருவத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

‘மிஷன் மௌசம்’, என்ற திட்டம், இந்தியப் பெருங்கடலை ஒட்டிய 39 நாடுகளுடன் கடல்சார் கலாச்சாரத் தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நாடுகளுக்கிடையேயான தேசிய கலாச்சாரங்களைப் புரிந்துகொள்வதும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான தகவல்தொடர்புகளை மீண்டும் உருவாக்குவதும் ‘மிஷன் மௌசம்’ திட்டத்தின் நோக்கமாகும்..

வளிமண்டல அறிவியல், வானிலை கண்காணிப்பு, முன்னறிவிப்பு மற்றும் வானிலை மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் திறனை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கமாகும்.

இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் இணைந்து இந்த திட்டத்தை செயற்படுத்தும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த திட்டம், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள், உயர் செயல்திறன் கொண்ட கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கவும், அதிக துல்லியத்துடன் வானிலையைக் கணிக்கும் ஒரு புதிய அளவுகோலை உருவாக்கவும் பயன்படும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய முதல் நடுத்தர அளவிலான வானிலை முன்னறிவிப்பு துல்லியத்தை ஐந்து முதல் 10 சதவீதம் வரை மேம்படுத்துவதையும், அனைத்து முக்கிய மெட்ரோ நகரங்களிலும் காற்றின் தரத்தை 10 சதவீதம் வரை மேம்படுத்துவதையும் மிஷன் மௌசம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

10 முதல் 15 நாட்கள் வரையிலான காலநிலை முன் கணிப்பை மூன்று மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக் மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புனேயில் உள்ள இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தில் “கிளவுட் சேம்பர்” நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்ப கழக ஆய்வகத்தில், செயற்கையாக மேகங்களை உருவாக்கி சோதனைகளை மேற்கொள்ளும் நிலையில், எந்த வகையான மேகங்களை விதைக்க முடியும் என்பதையும் விதைப்பதற்கு என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் மழையை அதிகரிக்க அல்லது தடுக்க எவ்வளவு விதைப்பு தேவைப்படுகிறது என்பதையும் கண்டறிய முடியும் என்றும், மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலர் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மழை மற்றும் ஆலங்கட்டி மழையை செயற்கையாக அதிகரிக்க அல்லது அதிக மழை பெய்வதைத் தடுக்க முடியும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்

மிஷன் மௌசம் திட்டத்தின் மூலம், விவசாயம், பேரிடர் மேலாண்மை, பாதுகாப்பு, சுற்றுச்சூழல், விமானப் போக்குவரத்து, நீர்வளம், மின்சாரம், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, போக்குவரத்து, எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளுக்கு நேரடியாகப் பயன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Do you want rain? Don't you? : New technology is coming India will be amazing!
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலின் சூப்பர் ஸ்கெட்ச்! : பேஜர்கள் மூலம் குண்டுவெடிப்பு மொசாட் நடத்தியது எப்படி?

Next Post

2-வது கொலை முயற்சி! : தோட்டாவிலிருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies