ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் நீடிக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி உரையாற்றினார்.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அவற்றை இந்தியாவிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், இந்தக் கருத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி பதிவு செய்தார்.
இதனிடையே, லெபனானில் பேஜர் உள்ளிட்ட தகவல்தொடர்பு கருவியில் வெடிபொருளை பொருத்தி, இஸ்ரேல் உயிர் சேதம் ஏற்படுத்தியது போர்க்குற்றத்துக்கு சமமானது என ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தலைவர் வோல்கர் துர்க் விமர்சித்தார்.