நிகழ் செப்டம்பர் மாதத்தின் முதல் 15 நாளில் வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் 32 ஆயிரத்து 779 கோடி ரூபாய் மதிப்பில் நிதி பத்திரங்களை வாங்கியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த வகையில், 17 துறைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். அதிகபட்சமாக நிதித்துறை 12 ஆயிரத்து 252 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் உற்பத்தியான வாகன உதிரி பாகங்கள், 1,983 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.