தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஏற்பட்ட நில அதிர்வால், கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடையம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வால் கோவிந்தபேரி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் கட்டி முடிக்கப்பட்ட புதிய வீட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், மன வேதனை அளிப்பதாக தெரிவித்த கூலி தொழிலாளி, கருப்பசாமி உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.