ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் முன்பு பதிவு தொடங்கியது. அக்டோபர் 17ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
நாள்தோறும் சுவாமிக்கு வழக்கான பூஜைகள் நடைபெறும் என்றும், அக்டோபர் 21ஆம் தேதி இரவு 10 மணியளவில் ஐயப்பன் கோயிலின் நடை அடைக்கப்படும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.