மேற்குவங்க மாநிலம், அலிபுர்துவார் பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அலிபுர்துவார் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், நியூ மைனகுரி ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
காலை 6.26 மணிக்கு நடந்த விபத்தில் 5 பெட்டிகள் தடம்புரண்டு தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூ மைனகுரி ரயில் நிலையம் 5 வழித்தடங்களை கொண்ட மையம் என்பதால், இந்த வழியாக செல்லும் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
மேலும், தண்டவாளத்தில் விழுந்துள்ள பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.