நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், நடிகரும், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக ஹேமா கமிட்டி அறிக்கையை சமர்ப்பித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவுமான முகேஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் கேரள போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இதன்பேரில், கொச்சியில் சிறப்பு விசாரணை குழு முன் முகேஷ் ஆஜரானார். சுமார் மூன்றரை மணி நேரம் அவரிடம் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர். ஏற்கெனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் அளித்ததால், மருத்துவப் பரிசோதனைக்குப் பின் முகேஷ் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கிய மலையாள நடிகரும், நடிகர் சங்கப் பொதுச் செயலருமான சித்திக்கின் இடைக்கால ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.