சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது.
அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே ஜாமின் வழங்கக்கோரி செந்தில் பாலாரிஜ தாக்கல் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது,
இதனையடுத்து ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும். சாட்சி, ஆதாரங்களை கலைக்க முற்படக்கூடாது. ரூ.25 லட்சத்திற்கான சொந்த பிணைத்தொகை வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.