பந்தலூர் அருகே யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன. இந்நிலையில், பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு காட்டு யானை புகுந்துள்ளது.
அதிகாலை 3 மணிக்கு குஞ்சு மொய்தீன் என்பவர் வீட்டின் அருகே வந்த காட்டு யானையை விரட்ட முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக யானை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகளால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதனை தடுக்க வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஊருக்குள் நடமாடும் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.