சென்னையில் பெய்த சிறு மழைக்கே முக்கிய சாலைகள் குளமாக காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக அயப்பாக்கத்தில் 13 சென்டி மீட்டரும், அம்பத்தூரில் 12 புள்ளி 6 சென்டி மீட்டரும், அண்ணா நகரில் 12 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இரவு கொட்டித்தீர்த்த மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மழைநீர் வடிகால் பணிகள் குறித்து கேள்வி எழுப்பும் வாகன ஓட்டிகள், சில மணி நேர மழைக்கே சென்னை தாக்குபிடிக்காத நிலையில், பருவமழையை எப்படி சமாளிப்பது என கேள்வி எழுப்பி உள்ளனர்.