ஜார்க்கண்ட் மாநிலம், பொகாரோவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
பொகாரோவில் இருந்து ராஜபேரா பகுதிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், துப்காடி பகுதி அருகே இணைப்பு துண்டாகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து சென்ற ரயில்வே அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
சரிந்து விழுந்த ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் 15 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும், ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.