அரசுப் பள்ளி மாணவர்கள் பேருந்து நிலையத்தில் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், ஊத்துக்கோட்டை பேருந்து நிலையத்தில் திடீரென மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினரை கண்டதும், மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். மாணவர்கள் சண்டையிடுவது அடிக்கடி நிகழ்வதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.