குரங்கம்மை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அனைத்து மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 23-ம் தேதி கேரளாவின் மலப்புரத்தில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டது. இது வழக்கமான குரங்கம்மையை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது ஆகும். இந்நிலையில் கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறும், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.