அணு ஆயுத பயன்பாட்டுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து வருவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
அதன்படி எந்தவொரு நாடாவது அணு ஆயுத பலம் பொருந்திய நாட்டின் உதவியுடன் ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அதனை கூட்டுத் தாக்குதலாக கருதி பதிலடி கொடுக்கப்படும்.
உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் அளிக்கும் நேட்டோ நாடுகள், அந்த ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்த அனுமதித்தால், அந்நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த இந்த கொள்கை மாற்றம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.