கோடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வழக்கின் முக்கிய நபரான வாளையார் மனோஜ் நேரில் ஆஜரானார்.
நீதிபதி லிங்கம் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை என்றும், தற்போது நடைபெற்றுவரும் புலன் விசாரணை குறித்தும் நீதிபதியிடம், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி லிங்கம் உத்தரவிட்டார்.