சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த மனு மீதான வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் டெண்டர் நிபந்தனைகள் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படை தன்மை விதிகளுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பில் டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட வேண்டுமென உத்தரவிட்டார்.