மூடி மறைத்த சீனா, மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மூடி மறைத்த சீனா, மூழ்கிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவின் அணுசக்தியால் இயங்கும் புதிய நீர்மூழ்கிக் கப்பல் வுஹான் துறைமுகத்தில் மூழ்கியதால் ஏற்பட்ட அவமானத்தை பல மாதங்களாக, சீன அரசு மறைத்தது அம்பலமாகியுள்ளது. இந்த உண்மையை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் அமெரிக்கா, வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய கடற்படையைக் கொண்டுள்ள நாடாக சீனா விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது ஆயுதப் படைகளை அதிவேகமாக அதிகரித்து வருகிறது. சீனக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸையும் தைவானையும் பயமுறுத்தி வருகின்றன.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் சீனா, நூற்றுக்கணக்கான போர் விமானங்களையும் குண்டுவீச்சு விமானங்களையும் தாங்கிய கப்பல்களை இந்திய- பசிபிக் கடல் பிராந்தியத்தில் நிறுத்தியுள்ளது.

ஏற்கெனவே, சீனா கணிசமான எண்ணிக்கையில் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது. சீனாவிடம் 130க்கும் மேற்பட்ட பெரிய மேற்பரப்புடன் கூடிய சுமார் 350 கப்பல்கள் மற்றும் பல நீர்மூழ்கிக் கப்பல்கள் இருப்பதாக 2020ம் ஆண்டு அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்தாண்டு, சீனாவுக்கும், கொரியாவுக்கும் இடையே உள்ள மஞ்சள் கடல் பகுதியில் சீன கடற்படைக்கு சொந்தமான பி.எல்.ஏ கடற்படையின் 093-417 என்ற நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்பட்ட விபத்தில், அந்த கப்பலில் மாலுமியுடன் இருந்த 21 அதிகாரிகள் உட்பட 55 பேர் உயிரிழந்தனர்.

பிரிட்டனின் ரகசிய அறிக்கையில், சீன நீர்மூழ்கிக் கப்பலின் ஆக்ஸிஜன் கருவிகளில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக சீன நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த கடற்படையினர் இறந்ததாக தெரிவித்தது.

இந்த விபத்தை அதிகாரப்பூர்வமாக மறுத்த சீனா, விபத்துக்குள்ளான நீர்மூழ்கிக் கப்பலைக் காப்பாற்ற சர்வதேச உதவியையும் மறுத்தது. இந்நிலையில், சீனாவின் புதிய அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியது என்றும், சீன கடற்படை இதனை மறைக்க முயன்றது என்றும் இரண்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வுஹான் நகருக்கு அருகிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டுமானத்தின்போது சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மூழ்கியுள்ளது. இந்த Zhou-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒரு தனித்துவமான X- வடிவ ஸ்டெர்னைக் கொண்டுள்ளன, இது நீருக்கடியில் சூழ்ச்சித்திறனை மேம்படுத்த பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கப்பலாகும்.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், கப்பலில் வேலை செய்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. ஆனால் ஜூன் மாதத்தில் இருந்து அதே தளத்தின் படங்கள் தளத்தில் மிதக்கும் கிரேன்களின் பெரிய குழுவைக் காட்டுகின்றன.

எனவே,மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில், இறுதிச் சோதனைகளைச் செய்து கொண்டிருக்கும் போது இந்த சீன நீர் மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மூழ்கும் போது அணு எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டதா என்பது பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றாலும் அதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன என்று அமெரிக்க ராணுவ வல்லுநர்கள் யூகித்துள்ளனர்.

சீனா, இந்த கப்பலை மறுசீரமைப்பு செய்யலாம் என்றும், அதற்கு பல மாதங்கள் ஆகும் என்றும் கூறியுள்ள அமெரிக்க இராணுவ அதிகாரிகள், சீனாவின் கட்டமைக்கும் திறன் நம்பமுடியாத வேகத்தைக் கொண்டதாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தனது விரைவான விரிவாக்கப் பணிகளால், மேற்கு நாடுகளை அச்சுறுத்தி வரும் சீன ராணுவத்திற்க, முதல் தர அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான Zhou-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கியது பெரிய அவமானம் என்பதில் ஐயமில்லை.

Tags: Wuhan harborSouth China Sea.Chinese government'sinking of China's new nuclear-powered submarine
ShareTweetSendShare
Previous Post

செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

Next Post

கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு போட்டி – ஆர்வமுடன் கண்டு ரசித்த பார்வையாளர்கள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies