சென்னை பூங்கா நகர் சென்னகேசவ பெருமாள் கோவில், ஶ்ரீபெருமாளின் திருப்பாதம் சுமந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் திருக்குடை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அமைப்பின் சார்பாக, ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோற்சவ சிறப்பு பூஜைகளுக்கு வெண்பட்டு திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
ஶ்ரீவெங்கடேச பெருமாளின் கருட சேவைக்கு, தமிழகத்திலிருந்து இரண்டு மங்கலப் பொருட்களாக, ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், சென்னையிலிருந்து 250 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்பட்டு திருக்குடைகள் வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இன்று சென்னை பூங்கா நகரில் உள்ள அருள்மிகு சென்னகேசவ பெருமாள் திருக்கோவிலில், ஶ்ரீபெருமாளின் திருப்பாதம் சுமந்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லக்கூடிய திருக்குடை ஊர்வலத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
மேலும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின், ‘அறம் காக்கும் பணியில் 60 ஆண்டுகள்’ என்ற தலைப்பிலான மணிவிழா ஆண்டு சிறப்பு மலரையும் அவர வெளியிட்டார்.