2024-ஆம் ஆண்டுக்கான ஐஃபா விருது வழங்கும் விழாவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 விருதுகளை தட்டிச் சென்றது.
2024-ம் ஆண்டுக்கான ஐஃபா விருது விழா அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெற்றது. இதில் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஐஸ்வர்யா ராய், மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திற்கு வழங்கப்பட்டது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான ஐஃபா விருதும், இரட்டை வேடத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சிறந்த நடிகைக்கான விருதும் அளிக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான விருது மணிரத்தினத்துக்கு வழங்கப்பட்டது.
மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளின் சிறந்த படங்களுக்கும் ஐஃபா விருதுகள் வழங்கப்பட்டன.