லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்க மற்றொரு முக்கிய தலைவர் நபில் காவோக் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தலைமையகத்தை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மூலம் தகர்த்தது.
இதில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடியாக அந்நாட்டின் வடக்குப் பகுதியைக் குறிவைத்து ஹிஸ்புல்லாக்கள் 65 ராக்கெட்டுகளை ஏவின.
இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் மற்றொரு முக்கிய தலைவரான நபில் காவோக் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.