ஜம்மு காஷ்மீரில் நாளை 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், 3வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் மேற்கொண்ட சூறாவளி பிரசாரம் நிறைவு பெற்றது. இதனைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை 8ம் தேதி நடைபெறுகிறது.
மேலும், தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தின் போது மல்லிகார்ஜூன கார்கே மயக்கமடைந்த நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து பிரதமர் மோடி விசாரித்துள்ளார்.