கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் இறப்பிற்கு நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சஞ்சய் ராய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், விரைந்து நீதி வழங்க கோரி மேற்கு வங்க ஜூனியர் மருத்துவர்கள், ஆர்.ஜி.கார் மருத்துவமனையிலிருந்து ஷாம்பஜார் வரை மெழுகுவர்த்தி, தீப்பந்தம் ஆகியவற்றை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.