ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்குச் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.
உள்நாட்டுப் போர் மற்றும் வறுமையால் வாடும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மத்திய தரைக்கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இந்த நிலையில், ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி படகில் புறப்பட்டனர்.
அப்போது எல் ஹியர்ரோ தீவுக்கு அருகே சென்ற படகு கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். 48 பேர் மாயமாகினர்.