இந்தியாவில் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் SMS-ல் இணையதள இணைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக நாளை முதல் டிராய் புதிய விதியை அறிமுகப்படுத்துகிறது.
அதன்படி SMS டிராஃபிக்கில், அனுமதிப் பட்டியலில் சேர்க்கப்படாத URLகள், ஓடிடி இணைப்புகளை தடுக்குமாறு அனைத்து தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கும் டிராய் அறிவுறுத்தியுள்ளது.
இந்த முயற்சியானது இந்திய நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான தகவல் தொடர்பு அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.