மதுரையில் போதையில் ஆயுதங்களுடன் அட்டூழியத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிந்தாமணி பகுதியில் மேட்டுப்பூஞ்சை தெரு, குருநாதர் கோவில் தெரு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ளிரவு மர்ம நபர்கள் சுற்றித்திரிந்தனர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டறைக்கு புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சக்திவேல், உமா மகேஸ்வரன் மற்றும் 3 சிறுவர்கள் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 4 கத்திகள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.