கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உலா வந்த பாகுபலி யானையை ஊர்மக்கள் காட்டுக்குள் அனுப்பினர்.
சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்களால் பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது. அந்த யானை லிங்காபுரம் கிராமத்தில் உலா வந்தது.
இதனை பார்த்து சுதாரித்த அப்பகுதியினர், அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்தி யானையை காட்டு பகுதிக்கு அனுப்பி வைத்த ஊர் மக்கள் அவ்வழியே வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து யானையை காட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.