வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானையை பொதுமக்கள் காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
அங்கனாம்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டுயானை நெற்பயிர்களை சேதப்படுத்தியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியதுடன் யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.